லைஃப் இன்ஷூரன்ஸ் வேகமாக க்ளெய்ம் பெற 5 வழிகள்

லைஃப் இன்ஷூரன்ஸ் ; வேகமாக க்ளெய்ம் பெற 5 வழிகள்...!


லைஃப் இன்ஷூரன்ஸ்  வேகமாக க்ளெய்ம் பெற 5 வழிகள்...!


பெரும்பாலானாவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வாங்கி வைத்திருப்பார்கள். அதாவது மணிபேக், எண்டோமென்ட், யூலிப் பாலிசிகளை முதலீட்டு நோக்கில் வாங்கி வைத்திருப்பார்கள். இந்த பாலிசிகள் முதிர்வு பெறும்போது க்ளைம் செய்துக் கொள்ளலாம். அதுவே டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி பாலிசிதாரர் மரணம் அடைந்த  பிறகுதான் க்ளைம் செய்ய முடியும். எனவே பாலிசிதாரரின் குடும்ப உறுப்பினர்கள் பாலிசியை க்ளெய்ம் செய்யும் போது சிக்கல் ஏற்படாத வகையில் சில முன் ஏற்பாடுகளை செய்து வைப்பது நல்லது.

1. கேஒய்சி அப்டேட்!
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியில்  எடுக்கும் போது பாலிசிதாரரின் பெயர், முகவரி, ஆகியவற்றை கொடுத்திருப்போம். இதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதை உடனாடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவிப்பது அவசியம். இதை கேஒய்சி படிவத்தில் மாற்றி வைப்பது நல்லது.


2. நாமினி அப்டேட்!
பாலிசியில் நாமினியாக நியமிக்கப்பட்டவர் பாலிசிதாரருக்கு முன்பே இறந்துவிட்டால், பாலிசியின் நாமினி இறந்துவிட்டார் என்பதை தெரிவித்து புதிய நாமினியை நியமிப்பது அவசியம்.

3. ஆவணங்களை சரியாக ஒப்படைத்தல்!
எண்டோமென்ட், மணிபேக் போன்ற பாலிசிகளை முதிர்வு தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது ஒரிஜினல் பாலிசி பத்திரம், வங்கி கணக்கு எண், வங்கி விவரம் ஆகியவற்றை முழுமையாக கொடுத்து க்ளெய்ம் செய்வது நல்லது. அதுவும் பாலிசி முடிந்த ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிப்பது நல்லது. ஒருவேளை பாலிசி பத்திரம் தொலைந்திருந்தால் அதை முன்கூட்டியே விண்ணப்பித்து நகல் பத்திரம் வாங்கி வைத்திருப்பது நல்லது.

4. குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது!
பாலிசி எடுத்தவுடன் பாலிசி குறித்த தகவல்களை குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது முக்கியம். அதாவது பாலிசியின்  பெயர்,  கவரேஜ் தொகை, பாலிசியின் கால அளவு, ஏஜென்ட் பெயர், அவரை தொடர்புக் கொள்வது எப்படி , பாலிசி எடுத்த நிறுவனம், அந்த நிறுவனத்தின் முகவரி, ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அதேபோல அந்த தகவல்களை ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதிவு செய்து வைப்பதும் முக்கியம்.

5. தகவல்களை அப்டேட் செய்வது!
பாலிசிதாரர் இறந்துவிட்டால் அந்த தகவலை இன்ஷூரன்ஸ் எடுத்த நிறுவனத்துக்கு உடனடியாக தெரிவிப்பது அவசியம். இதை எந்தவிதமான தாமதமும் இல்லாமல் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழை சமர்பிப்பது முக்கியம்.